ஒன்றரை வயதுடைய ஆண்குழந்தையின் விதைப்பைகள் இரண்டையும் துண்டித்தார் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 38 வயதுடைய தாயொருவரைக் கைது செய்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை ஓட்டமாவடியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட தாய் அவ்வைத்தியசாலையின் மனநலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் தனது இளைய குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது புத்தி பேதலித்த நிலையில் குழந்தையின் இரு விதைப்பைகளையும் துண்டித்துத்துள்ளார்.
குழந்தை வீறிட்டு அழவே அக்கம்பக்கத்தார் ஓடிச் சென்று குழந்தையை மீட்டெடுத்து வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குழந்தையின் தாயைக் கைது செய்துள்ளனர்.
இந்தத் தாய் அவ்வப்போது சித்தப்பிரமைக்கு உள்ளாவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம்பற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment