18 Oct 2018

சுற்றுலாத்துறையும் நலனோம்புகை மேம்பாடும் சம்பந்தமாக ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வு

SHARE
சுற்றுலாத்துறையும் நலனோம்புகை மேம்பாடும் (Tourism and Hospitality)   சம்பந்தமாக மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வு சனிக்கிழமை 20.10.2018 காலை 9.30 தொடக்கம் பிற்பகல் 3.30 வரை மட்டக்களப்பு உல்லாச விடுதியில் இடம்பெறவுள்ளதாக இத்திட்டத்தை அமுல்படுத்தும் உணர்திறன் நுண்ணறிவுக்கான வாழ்க்கைத் திறன் பயிற்சிக் குழு (Emotional Intelligence life Skills Training Team)  திட்ட இணைப்பாளர் எம்.எஸ்.எப். ஷாமிர் தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி அனுசரணையுடனும் இலங்கை விஞ்ஞான தொழினுட்ப அமைச்சின் பங்களிப்புடனும் இத்திட்டம் இலங்கையில் அமுலாகிறது.

சுற்றுலாத்துறையும் நலனோம்புகை மேம்பாடும் சம்பந்தமாக ஊடகவியலாளர்களுக்குத் தெளிவூட்டும் செயலமர்வுகள் ஏற்கெனவே அம்பாறை திருகோணமலை பொலொன்னறுவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு நடபாத்தப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சித் திட்டம் சம்பந்தமாக தெளிவுபடுத்தும் செயலமர்வின் பிரதான வளவாளராக சப்ரகமுவ பல்கலைக் கழகப் பேராசிரியர்  எம்.எஸ்.எம். அஸ்லம் கலந்து கொள்கின்றார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் “உள்வாங்கல் வளர்சிக்கான ஆற்றல்”திட்டத்தின்  Skills for Inclusive Growth  மூலம் இலங்கையில் சுற்றுலாத்துறையும் நலனோம்புகை மேம்பாடும் என்ற திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முக்கிய தடைகள் அவற்றை சீரமைப்பதற்கான மூலோபாயத் திட்டங்கள் குறித்து இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகின்றது


SHARE

Author: verified_user

0 Comments: