8 Jun 2018

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பராமரிப்பு பிரிவில் கடமையாற்றுவோரின் நிரந்தர நியமனகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை.

SHARE
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பராமரிப்பு பிரிவில் கடமையாற்றும் நுடநஉவசiஉயைnஇ  Pடரஅடிநசஇ ஊயசிநவெநசஇ Pயiவெநச ஆகியோருக்கு தங்களது தொழிலினை உறுதிப்படுத்தி நிரந்தர நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொள்வதற்கான உரிய நடவடிக்கைகளை ஜனநாயக ஒருங்கிணைந்த சேவைகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை மேற்கொண்டுள்ளதாக அச்சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவரர் குணரத்தினம் திருமால் திங்கட் கிழமை (04) தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலம் அவர்தெரிவிக்கையில்…
இந்நியமனங்களை வழங்குவது தொடர்பில் சுகாதார அமைச்சாரின் கவனத்திற்குக் கொண்டு வந்தபோது இதனை வழங்குவது தொடர்பில் அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் ஜனநாயக ஒருங்கிணைந்த சேவைகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் குணரத்தினம் திருமால் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக ஒருங்கிணைந்த சேவைகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவராக குணரத்தினம் திருமாலுக்குரிய நியமனக் கடிதம் கடந்த 16.05.2018 அன்று  சுகாதார அமைச்சினால் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயக ஒருங்கிணைந்த சேவைகள் சங்கத்தின் (தலமைச் சங்கம்) தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவும் செயலாளராக ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளரான சோமரத்னவும் இருக்கின்ற அதேவேளை அச்சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவராக கு.திருமாலும் செயலாளராக லோகேந்திராவும் உப தலைவராக யோகநாதனும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: