28 May 2018

கடனாளியாக்கும் நுண்கடன் திட்டத்தில் இருந்து விடுபடுங்கள் - சாணக்கியன் அறிவுரை

SHARE
மக்களை கடனாளியாக்கும் நுண்கடன் நிதி நிறுவனங்களின் கடன் திட்டத்தில் இருந்து அனைவரும் விடுபட வேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் திங்கட்கிழமை (28)  காலை பழுகாமத்தில் வாழ்வாதார உதவி வழங்கி வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 
தற்போது வடக்கு கிழக்கில் பல நுண்கடன் நிதி நிறுவனங்களின் உள்நுழைவு அதிகமாக காணப்படுகின்றது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீட்சி பெற்று வருகின்ற இந்த வேளையில் இவ்வாறான நிதி நிறுவனங்களின் நடவடிகக்கைகள் மக்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இம்முறையில் அதிகளவு பெண்களே ஈர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் சுயதொழிலுக்கு என்னும் பெயரில் கடனை பெற்று அனாவசியமாக செலவழித்து விட்டு அக்கடனை நிவர்த்தி செய்ய மேலும் பல கடன்களை தொடர்ச்சியாக பெற்றுவருகின்றமையினால் இறுதியில் அனைத்தும் இணைந்து கழுத்தை நெருக்கும் அளவுக்கு மரணத்தின் வழிக்கு அனைவரையும் இட்டுச் செல்கின்றது.

ஆகவே இவ்வாறான கடனை பெற்றால் அவற்றை பிரயோசமான முறையில் பயன்படுத்தி அதில் இருந்து அபிவிருத்தி அடைய வேண்டும். இல்லாவிடின் அதனை பெறாமல் வேறு வழியில் சுயதொழிலை  பெற்று வாழ்வாதாரத்தை அதிகரிக்க வேண்டும்.

இதில் கிராமமட்ட அமைப்புக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இவ் அமைப்புக்களின் சேமிப்பில் பல இலட்சம் தொகை உள்ளது. இவர்கள் மக்களுக்கு வட்டியில்லாக்கடன் அல்லது மிகவும் குறைந்தளவிலான வட்டி வீதத்தில் கடனை கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். இன்று இந்த நுண்கடன் திட்டத்தால் பல தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமையை அனைவரும் அறிவோம். எனவே இந்த நுண்கடன் திட்டத்தில் இருந்து விடுபடுங்கள் என தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: