28 May 2018

கடையின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மாயம்

SHARE
வழமை போன்று தனது கடையின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி காலையில் எழந்து  பார்த்ததும் காணாமல் போயிருந்ததாக அதன் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு அருகிலுள்ள கடையொன்றில் வைத்தே இச்சம்பவம் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

ஏ.கே.பி. 0011 எனும் இலக்கத் தகடு கொண்ட நீல நிறமான தனது முச்சக்கர வண்டியை கடைசியாக சனிக்கிழமை அதிகாலை 12.20 மணியளவில் தான் பார்த்துவிட்டுத் தூங்கியதாகவும் காலையில் 6 மணிபோல் மீண்டும் அதனைப் பார்த்தபோது அது காணாமல் போயிருந்ததாகவும் உரிமையாளர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: