18 May 2018

கணிதப் புதிர் போட்டியில் மட்.பட்.மண்டூர் 13 விக்னேஸ்வரா மகாவித்தியாலயம் சாதனை.

SHARE

சர்வதேச மட்டத்தில் நடாத்தப்படுகின்ற கணிதப் புதிர் போட்டியில் மட்.பட்.மண்டூர் 13 விக்னேஸ்வரா மகாவித்தியாலய மாணவன் சதசானந்தம் அஜந்தன் எனும் மாணவன் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்று சிங்கபூரில் நடைபெறவுள்ள கணிதப் புதிர் போட்டியில் பங்குபற்றுவதற்குத் தகுதி பெற்றுள்ளார்.  
இம்மாணவனையும் பயிற்றுவித்த ஆசிரியர் பே.யோகேஸ்வரன் அவர்களையும் ஊக்குவித்த பாடசாலை அதிபர் துரை சபேசன் அவர்களையும் பாடசாலைச் சமூகம் பாராட்டுகின்றது. இப் பாடசாலை அதிகஸ்ரப் பிரதேச பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது. 


SHARE

Author: verified_user

0 Comments: