மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள - பெரியபுல்லுமலை- நாற்பது ஏக்கர்வட்டை வயற்பிரதேசத்தில்
காட்டு யானை தாக்கியதில் வயோதிப விவசாயி ஒருவர் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளைவீதி- தும்பாலஞ்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த தம்பிராசா பரமானந்தம் (வயது 73) என்பவரே காட்டு யானைத் தாக்குதலில் கொல்லப்பட்டவராகும்.
திங்கட்கிழமை (02.01.2017) மாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் மாடுகளை விரட்டிக் கொண்டு வந்த சமயம் காட்டுப் பக்கமிருந்து நேரெதிரே யானை வயோதிபரைத் தாக்கி மிதித்துக் கொன்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
சடலம் உடற் கூற்றுப் பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு உறவினளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.
கரடியனாறு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
0 Comments:
Post a Comment