21 Sept 2016

பிரதேச சபைகளை நகர சபையாக மாற்றுவதற்கான தனிநபர் பிரேரணை. மாகாண சபை உறுப்பினர் ஜனா

SHARE
(பழுவூரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரண்டு பிரதேச சபைகளான மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபைகளை நகரசபையாக்கும் தனிநபர் பிரேரணையினை  இம்மாத மாகாண சபை அமர்வில் முன்வைப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தேர்தல் தொகுதிகளில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஒரு மாநகர சபையும், இரண்டு நகர சபைகளையும் கொண்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் தனித்தமிழ் தொகுதியான பட்டிருப்புத் தொகுதியில் மூன்று பிரதேச சபைகள் உள்ளன. 

இதில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையானது பிரதான வீதியான மட்டக்களப்பு – கல்முனை வீதியில் இருப்பதோடு அதிகளவான சனத்தொகையையும் கொண்டுள்ளதுடன் ஆதார வைத்தியசாலை, சகல அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் போன்றவற்றை கொண்டுள்ளமையினால் இந்த ம.தெ.எ.ப. பிரதேச சபையினை நகர சபையாக தரமுயர்த்துவதுடன், கல்குடாத் தொகுதியில் உள்ள பிரதேச சபைகளுள் அதிக சனத்தொகை மற்றும் பெரிய பிரதேசத்தையும் கொண்ட ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையினையும் நகர சபையாக தரமுயர்த்துவதற்கு கிழக்கு மாகாண சபை 22.09.2016 அமர்வின் போது  தனிநபர் பிரேரணையினை கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

SHARE

Author: verified_user

0 Comments: