7 Aug 2016

5300 மில்லிகிராம் கஞ்சாவுடன் வீதியில் நடமாடிய குடும்பஸ்தர் கைது

SHARE
கஞ்சாவுடன் வீதியில் நடமாடிய 30 வயதான குடும்பஸ்தர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை  (ஒகஸ்ட் 07, 2016) கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
விற்பனைக்காக தம்வசம் கஞ்சா வைத்திருந்த  இந்த நபர் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாதுறை பிரதான  வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 5300 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் வீதிகளில் உலாவந்தவாறு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததின் பேரில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: